பாட்டியின் பாட்டுக் கதைகள்



மழலைகளுக்குப் பாட்டியென்றால் உயிர். அதிலும் கதைகள் சொல்லி, பாட்டுப் பாடி அவர்களை மகிழ்விக்கும் பாட்டியென்றால் கேட்கவே வேண்டாம். இணையத்தின் மழலைகளுக்கென்றே ஒரு இணணையில்லா இணையப் பாட்டியாக அம்மம்மா விசாலம் அவர்கள் கிடைத்துள்ளார். இவர் குழந்தைகள் மீது அதீதமான அன்பு கொண்டவர். சிறந்த அறிவும் மிகுந்த அனுபவமும் கொண்ட இவர் குழந்ததைகளுக்கென்று கூறியுள்ள கதைகள் குழந்தைகள் மட்டுமின்றி அனைவரும் படித்து மகிழக்கூடியவை.

தீபாவளிப் பாட்டு

பாட்டி நல்ல பாட்டி, அன்பைப் பொழியும் பாட்டி,

தீபாவளிக் காலை என்னை எழுப்பி விட்ட பாட்டி,

சோம்பிப் படுத்த எனக்கு, பட்டாசு காட்டிய பாட்டி

தலையில் எண்ணெய் வைத்து விட்டு

பாட்டுப் பாடிய பாட்டி

கங்கா ஸ்னானம் ஆச்சு என்று பட்டுடை கொடுத்த பாட்டி

ஸ்லோகத்துடன் லட்சுமி பூஜை குபேர பூஜையுடன்

வயிறுக்கும் பூஜை

அன்பு கலந்த இனிப்புகள் அள்ளி வழங்கும் பாட்டி

முற்றம் முழுதும் விளக்கு வைத்து

மத்தாப்பு ஏற்றிக் கொடுத்த பாட்டி

அமெரிக்காவில் என் பெற்றோர் இருக்க

எனக்கு எல்லாம் நீ தான் பாட்டி.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home